close
Choose your channels

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதற்கு ஈடு இணை கிடையாது: நயனின் 'அன்னையர் தின ஸ்பெஷல் வீடியோ..!

Sunday, May 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை நயன்தாரா தனது இரண்டு குழந்தைகளுடன் விளையாடும், கொஞ்சும் காட்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது சமூக வலைதளத்தில் அவ்வப்போது பதிவு செய்யப்படும் என்பதும் அவை க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் விளையாடும், கொஞ்சும் காட்சிகளை விக்னேஷ் சிவன் வீடியோ எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நயன்தாராவின் தோளில் உட்கார்ந்து கொண்டு அவரது தலையில் தனது பிஞ்சு கைகளால் செம்ம அடி அடிக்கும் குழந்தை, அம்மாவுக்கு உதட்டு கொடுக்கும் காட்சி, இரண்டு குழந்தைகளுக்கு ஓடி விளையாடும் காட்சிகள் என இந்த வீடியோவில் பல க்யூட்டான காட்சிகளை இருப்பதை எடுத்து அன்னையர் தின ஸ்பெஷல் வீடியோவாக கருதப்படுகிறது.

இந்த வீடியோவுக்கு ’எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு அன்னை என்று வந்துவிட்டால் குழந்தைகளை கொஞ்சும் போது அவரது முகத்தில் இருக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை கிடையாது’ என்றும் நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ், லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.