close
Choose your channels

ஸ்டிரைக்கை மீறி ரிலீஸ் ஆகிறதா நயன்தாரா படம்?

Monday, March 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை இல்லாத வகையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே வேலைநிறுத்தத்தில் கடந்த ஒரு மாதமாக வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்பது முதல் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் வரை எந்தவொரு சினிமா சம்பந்தமான பணியும் இதுவரை நிறுத்தப்பட்டது இல்லை

ஆனால் ஒற்றுமையாக நடந்து வரும் இந்த வேலைநிறுத்தத்தை குலைக்க ஒருசிலர் சதி செய்துவருவதாக கூறப்படுகிறது. ஸ்டிரைக்கை மீறி ரிலீஸ் செய்யும் படங்களுக்கு அதிக சலுகை தருவதாக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் கியூப் நிறுவனம் ஆசை வார்த்தை காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மம்முட்டி, நயன்தாரா நடித்த மலையாள திரைப்படமான 'புதிய நியமம்' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'வாசுகி' திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆனால் இத்தனை நாள் வேலைநிறுத்தம் செய்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதால் இந்த படம் வெளியாகமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்த நயன்தாராவிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.