close
Choose your channels

சென்னை திரும்பிய 'நேர்கொண்ட பார்வை' டீம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Tuesday, April 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராம் பிலிம் சிட்டியில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. முதலில் தாடி மீசையுடன் கூடிய அஜித்தின் வழக்கறிஞர் கெட்டப்புக்குரிய காட்சிகள் படமாக்கப்பட்டது. அதன்பின் தாடிமீசையை எடுத்துவிட்ட அஜித், வித்யாபாலனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் மொத்த டீமும் நேற்று சென்னை வந்தடைந்தனர். இதனையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது. விரைவில் அஜித் இந்த படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.