close
Choose your channels

பிக்பாஸ் பாலாஜி மீது பாயும் ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு!

Monday, November 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருபவர் பாலாஜி. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே அழகிப் போட்டி நிறுவனம் ஒன்றை சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் விமர்சனம் செய்தார் பாலாஜி. அதுமட்டுமின்றி சனம் ஷெட்டி அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் அந்த அழகி போட்டி நிறுவனத்தில் வாய்ப்பு பெற்றதாகவும் கூறினார்.

இதனை அடுத்து சனம்ஷெட்டி பாலாஜியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வாரம் சனிக்கிழமை கமலஹாசனும் பாலாஜி கண்டனம் தெரிவித்தார் என்பதும் பாலாஜி தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலாஜி விமர்சனம் செய்த அழகி போட்டி நிறுவனத்தின் ஏற்பாட்டாளர் ஜோ மைக்கேல் ஏற்கனவே பாலாஜிக்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக தனது நிறுவனம் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பாலாஜிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தனது நிறுவனத்தை தவறாக பேசியதற்காக பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் ரூபாய் ஒரு கோடி மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.