close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் ஓவியா உண்ணாவிரதம்! என்ன செய்ய போகிறார் பிக்பாஸ்

Thursday, August 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்த ஒரே நபரான ஓவியா திடீரென உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளதாக சற்றுமுன் வெளிவந்துள்ள புரமோவில் தெரிகிறது. ஓவியாவின் மனதை ஓரளவு புரிந்து கொண்ட ஒரே நபரான பிந்துமாதவி கூறியும் ஓவியா சாப்பிட மறுக்கின்றார். உங்களுக்கு ஸ்வீட் பிடிக்குமே சாப்பிடுங்கள் என்று ரைசா கூறியபோது, நீங்க தான் ஸ்வீட்டா இருக்கிங்க, நீங்க சாப்பிடுங்க என்று கூறுகிறார்.

என்னை பற்று யாரும் ரொம்ப கேர் எடுத்து கொள்ள வேண்டாம் என்று ஓவியா மற்றவர்களிடம் கூறுகிறார். இந்த நேரத்தில் ஒரே ஒரு நபரால் வீட்டில் உள்ள மீதி 8 பேரின் தூக்கம் கெடுகிறது, நிம்மதி கெட்டு போகிறது என்று சக்தி புகார் கூறுகிறார். அதுமட்டுமின்றி ஓவியா திருந்தும் வரை யாரும் சமைக்க வேண்டாம், கிளீனிங் செய்ய வேண்டாம் என்று வெறுப்புடன் கூறுகின்றார்.

இந்த நிலையில் ஓவியா கேமிரா முன் பிக்பாஸூக்கு கூறுவது என்னவெனில், 'நீங்கள் என்னை அழைத்து பேசும்வரை நான் சாப்பிட மாட்டேன்' என்று கூறுகிறார். பிக்பாஸ் அழைத்து பேசுவாரா? அப்படி பேசினால் ஓவியாவிடம் அவர் என்ன சொல்லுவார்? என்று இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.