close
Choose your channels

மீண்டும் இணைந்த ஓவியா-ஆரவ்

Wednesday, November 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஓவியா-ஆரவ் காதல். இந்த காதலால் மன அழுத்தம் ஏற்பட்டு நிகழ்ச்சியில் இருந்து இடையில் வெளியேறிய ஓவியா பின்னர் தனது டுவிட்டரில் தான் ஒரு சிங்கிள் என்றும் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த டுவீட்டுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்தது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா, ஆரவ் இருவரும் தங்கள் நட்பை தொடர்ந்ததோடு, சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். தற்போது மீண்டும் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். அதுதான் ஆரவ்வின் பிறந்த நாள் நிகழ்ச்சி

பிக்பாஸ் டைட்டிலை வென்ற பின்னர் வரும் முதல் பிறந்த நாளை ஆரவ்வின் குடும்பத்தினர் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஓவியா, கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆரவ்வுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஓவியா அவருடன் இணைந்து விதவிதமான போஸ்கள் கொடுத்து அனைவரையும் அசத்தியுள்ளார். தற்போது நண்பர்களாக இணைந்துள்ள இருவரும் மீண்டும் காதலர்களாக இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.