close
Choose your channels

நயன்தாராவை லேடி சூர்யா என்று அழைப்பது ஏன்? பாண்டிராஜ்

Thursday, May 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'இது நம்ம ஆளு' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்தும், இதில் நாயகியாக நடித்த நயன்தாரா குறித்தும் இயக்குனர் பாண்டிராஜ் மனம் விட்டு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் எனது வழக்கமான படங்களில் இருப்பதுபோல காமெடி, காதல், எமோஷன்ஸ் ஆகியவை கண்டிப்பாக இருக்கும். குறிப்பாக இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத படம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பொதுவாக காதல் என்பது மூன்று வகைப்படும். காதல் செய்து திருமணம் செய்து கொள்வது, நிச்சயதார்த்தம் ஆன பின்னர் காதல் செய்வது, திருமணத்திற்கு பின்னர் மனைவியை காதல் செய்வது என காதல் மூன்று வகைப்படும். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் இதில் ஏதாவது ஒன்றை அனுபவித்திருப்பதை உணர முடியும்.

சிம்புவும் நயன்தாராவும் இப்போதும் நல்ல நண்பர்களாக இருப்பதை நான் நேரில் பார்த்துள்ளேன். இந்த படத்தின் கதையை கூறியதும் நயன்தாரா உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்று கூறினால் அவர் சரியாக 8.50க்கு படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். எனக்கு தெரிந்து சூர்யாவுக்கு பின்னர் படப்பிடிப்புக்கு சரியாக வருபவர் நயன்தாரா ஒருவரே எனவே அவரை நாம் ஒரு லேடி சூர்யா என்று அழைப்பதில் தவறில்லை' என்று பாண்டிராஜ் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.