close
Choose your channels

பண்டிட் ஷிவகுமார் ஷர்மா மறைவு: நட்பின் ஆழத்தை விவரிக்கும் ஒரே ஒரு புகைப்படம்!

Saturday, May 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் இசை மேதையான பண்டிட் ஷிவகுமார் சர்மா காலமான நிலையில் அவருடைய நெருங்கிய நண்பரும் இசைக் கலைஞருமான ஜாகிர் உசேன் அவரது சமாதி முன் நின்று இருந்த புகைப்படம் நட்பின் ஆழத்தை விவரிப்பதாக கூறப்பட்டு வருகிறது.

கடந்து மே 10ஆம் தேதி 84 வயதான பண்டிட் ஷிவகுமார் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய இறுதிச் சடங்கின்போது ஷிவகுமாரின் நெருங்கிய நண்பரான ஜாகீர் உசேன் அவருடைய உடலை தூக்கிச் சென்றவர்களில் ஒருவராக இருந்தார். அது மட்டுமின்றி அவரது உடல் எரியூட்டப்பட்ட பின், தனியாக அங்கு நின்று தனது நீண்டநாள் நண்பருக்கு பிரியா விடை கொடுத்த புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

இந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நெட்டிசன்கள் ஒரே ஒரு புகைப்படம் முழு வாழ்க்கையையும் விவரிக்கிறது. நட்பின் ஆழம், ஒற்றுமை மற்றும் இழப்பை தத்ரூபமாக காட்டும் புகைப்படமாக உள்ளது என்று பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.