close
Choose your channels

பார்த்திபனின் அடுத்த வித்தியாசமான முயற்சி: இதுவும் உலகின் முதல்முறையா?

Tuesday, July 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’புதியபாதை’ படம் முதல் பார்த்திபனின் அனைத்து படங்களுமே வித்தியாசமாக இருக்கும் என்பதும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவர் எடுத்து வரும் திரைப்படங்கள் தனித்துவமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தில் ஒரே ஒருவர் மட்டுமே நடித்து சாதனை செய்த நிலையில் சமீபத்தில் வெளியான ’இரவின் நிழல்’ திரைப்படம் உலகின் முதலில் வெளியான சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நடிகர், இயக்குனர் பார்த்திபன் அடுத்த முயற்சியாக மனிதர்களே இல்லாமல் முழுக்க முழுக்க மிருகங்களை வைத்து படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஹாலிவுட்டில் முழுக்க முழுக்க விலங்குகள் உடைய அனிமேஷன் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது என்றாலும் உண்மையான விலங்குகளை வைத்து முழுக்க முழுக்க ஒரு திரைப்படம் எடுப்பது உலகில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தேவர் பிலிம்ஸ் உள்பட பல நிறுவனங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகள் நடித்த திரைப்படங்களை தயாரித்த தற்போது முதல் முறையாக விலங்குகள் மட்டுமே நடிக்கும் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கவுள்ள பார்த்திபனின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.