close
Choose your channels

15 வருடங்கள் கழித்தும் பாராட்டை பெற்ற விஜய் படம்: இயக்குனர் பேரரசு நெகிழ்ச்சி

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் உள்ள அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டாலும், முன்பை விட அதிக லாபம் தரும் ஒரே தொழிலாக ஊடகங்கள் உள்ளன. குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதை கணக்கில் கொண்டு சூப்பர் ஹிட்டான அஜித், விஜய் படங்களை மாறி மாறி ஒளிபரப்பி வருகின்றன.

அந்த வகையில் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படம் ஒளிபரப்பானது. கொரோனா செய்திகளின் பரபரப்புக்கு இடையே ‘திருப்பாச்சி’குறித்த டுவிட்டுகளும் டிரண்டுக்கு வந்தன. கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் படமான இந்த படத்தை 15 வருடங்களுக்கு பின்னரும் பலரும் முதல்முறை பார்ப்பது போல் ரசித்து பார்த்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ‘திருப்பாச்சி’ பட இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நேற்று சன் டிவியில் ’திருப்பாச்சி’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது! நேற்றுதான் படம் ரிலீஸ் ஆனதுபோல் நிறைய பேர் இன்று தொலைபேசியில் பாராட்டினார்கள். பாராட்டிய அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் பேரரசுவின் இந்த டுவிட்டுக்கு பலர் பாராட்டி கமெண்ட் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.