close
Choose your channels

ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

Thursday, April 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்றுமுன்னர் இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இயக்குநர் தங்கர்பச்சான், நடிகை கஸ்தூரி உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் ரஜினியை ’தலைவா’ என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தலைமுறைகளாக பிரபலமான, ஒருசிலருக்கு மட்டுமே வரும் உடல்மொழி மற்றும் ஆளுமை, மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் பெர்சானலிட்டி கொண்ட ‘தலைவா’ ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.