close
Choose your channels

கமல், ரஜினி பட நடிகையை காணவில்லையா? போலீசார் தேடி வருவதாக தகவல்..!

Monday, January 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல், ரஜினி பட நடிகை வழக்கு ஒன்றில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நிலையில் அவரை காணவில்லை என்பதால் போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் ,ரஜினிகாந்த், விஜயகாந்த் உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகை ஜெயப்பிரதா, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் பலமுறை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை என்ற நிலையில் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனவரி 10ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஜெயப்பிரதாவை காணவில்லை என்றும், அவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தொழிலாளர்களின் இ.எஸ்.ஐ பணத்தை முறைகேடு செய்ததாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் ஜெயபிரதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.