close
Choose your channels

பொங்கல் விடுமுறை நீக்கம். உண்மையில் நடந்தது என்ன?

Tuesday, January 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை விடுமுறையை இந்த ஆண்டு மத்திய அரசு கட்டாய விடுமுறையில் சேர்க்காமல் விருப்ப விடுமுறையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறையில் இல்லை என்பதும் அது விருப்ப விடுமுறையில்தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்பட ஒவ்வொரு ஆண்டும் 14 கட்டாய விடுமுறை தினங்கள் கட்டாய விடுமுறை தினங்களாக இருப்பதுண்டு. இதுதவிர 3 நாட்கள் கூடுதல் விடுமுறைகளை அந்தந்த மாநிலத்தில் இருக்கும் மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த குழு இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை பட்டியலில் இணைக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சனிக்கிழமைதான் வருகிறது. சனிக்கிழமை அதுவும் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்பதால் பொங்கல் பண்டிகையை தேர்வு செய்யாமல் அதற்கு பதிலாக சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தசரா விடுமுறைகளை தேர்வு செய்துள்ளது.
எனவே இந்த பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் அதாவது தசரா பண்டிகை விடுமுறை நாள், கூடுதலாகத்தான் விடுமுறை கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு வழக்கம்போல் இந்த குழு பொங்கல் திருநாளைத்தான் விடுமுறையாக தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.