close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' எனது கனவுகளில் ஒன்று: அட்லி

Friday, October 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியன் செல்வன்' வரலாற்று நாவலை எம்ஜிஆர், சிவாஜி, மணிரத்னம், கமல்ஹாசன் உள்பட பலர் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இன்று வரை இந்த நாவல் படமாக்கப்படவில்லை. இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி, பாகுபலி 2' படங்கள் பெற்ற மிகப்பெரிய வெற்றி காரணமாக மீண்டும் பிரபல இயக்குனர்களின் பார்வை வரலாற்று திரைப்படங்கள் மீது பதிந்துள்ளது. தற்போது பெரிய பட்ஜெட்டில் 'இராமாயணம்', 'மகாபாரதம்' போன்ற இதிகாசங்கள் படமாக்கப்படுகின்றன.

அந்த வகையில் பொன்னியின் செல்வன்' நாவலும் விரைவில் திரைப்படமாக்கும் வாய்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த 'மெர்சல்' இயக்குனர் அட்லி, 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்குவது தனது கனவுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'வரலாற்றுப் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை. ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. பட்ஜெட்டும் நட்சத்திரங்களும் அமைந்தால் அதுபோன்ற ஒரு வரலாற்றுப் பிரம்மாண்டத்தைத் திரையில் கொண்டுவர இப்போது வயது இருக்கிறது. காலமும் சூழ்நிலையும் எனக்குத் தரும் வாய்ப்புகளைப் பொறுத்துத்தான் எல்லாமே' என்று கூறியுள்ளார்.

வரலாற்று திரைப்படங்களான பஜ்ரங்கி பாய்ஜான்', பாகுபலி போன்ற படங்களுக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் 'மெர்சல்' படத்தில் பணிபுரிந்த அட்லி, மீண்டும் அவருடன் இணைந்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.