close
Choose your channels

என்னை யாரும் கைது செய்யவில்லை, நான் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்: பூனம் பாண்டே

Tuesday, May 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. மும்பையில் தனது ஆண் நண்பருடன் அவர் ஊரடங்கு நேரத்தில் அவசியம் இன்றி சுற்றி தெரிந்ததாகவும் இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு மீறல் மற்றும் நோயை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் அவரது விலையுயர்ந்து பிஎம்டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து பூனம் பாண்டே தனது சமூக வலைப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். தான் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும் தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் நேற்று மட்டும் மூன்று திரைப்படங்கள் பார்த்ததாகவும் அவை மூன்றும் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக வெளி வந்த தகவல் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது. பூனம் பாண்டே கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில் தற்போது அவரது வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.