close
Choose your channels

பணப்பெட்டி எடுத்துட்டு வெளியில போயிருவேன், எனக்கு வின்னர் யாருன்னு தெரிஞ்சிருச்சு.. சொன்னது யார்?

Tuesday, December 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க் முடிந்ததும் அனேகமாக பணப்பெட்டி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் ஒரு லட்சம் என்று தொடங்கும் இந்த பணப்பெட்டியின் மதிப்பு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகபட்சமாக 10 முதல் 15 லட்சம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மாயா பூர்ணிமா மற்றும் விசித்ரா ஆகியோர் பணப்பெட்டி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் '15 லட்சம் பணப்பெட்டி வந்தவுடன் நான் அதை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். எனக்கு யாரு டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விட்டது’ என்று கூறினார். அதற்கு மாயா ’அர்ச்சனா தானே’ என்று கூற பூர்ணிமா ’ஆமாம்’ என்கிறார். ’கடந்த சில நாட்களாகவே அர்ச்சனா பாட்டு பாடியே மக்களை மயக்கி விடுகிறார் என்று விசித்ராவும் கூறுகிறார்.

அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என தற்போது ஒரு சில போட்டியாளர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் அதே நேரத்தில் பணப்பெட்டியை எடுக்க அதிக போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பூர்ணிமாவை தவிர மணி, ரவீனா, விஷ்ணு ஆகியோர்களும் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் எதிர்பார்த்தபடி அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆவாரா? பணப்பெட்டியை எடுத்துச் செல்லும் போட்டியாளர் யாராக இருப்பார்? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.