close
Choose your channels

விவசாயிகள் பிரச்சனையை அடுத்து விநாயகர் பிரச்சனையில் சிக்கிய ரிஹானா!

Wednesday, February 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற பாப் ஸ்டார் ரிஹானா தனது டுவிட்டர் பக்கத்தில் ’இன்னும் நாம் ஏன் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் இருக்கிறோம்’ என்று பதிவு செய்த ஒரே ஒரு ட்வீட் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஒரு பக்கம் மத்திய அரசும் இன்னொரு பக்கம் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் ரிஹானாவின் டுவிட்டுக்கு கண்டனங்களை தெரிவித்த நிலையில் இன்னொரு பக்கம் ஒரு சில அரசியல்வாதிகள் ரிஹானாவின் டுவிட்டை ஆதரித்தும் பேசி வந்தனர்

இந்த நிலையில் ஒரே நாளில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசி இந்தியா முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரிஹானா தற்போது விநாயகர் பிரச்சனையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் ரிஹானா. அதில் அவர் கழுத்தில் விநாயகர் படம் போட்ட டாலர் உள்ளதை அடுத்து இந்து மத ஆதரவாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் ரிஹானா செயல்பட்டு உள்ளார் என்றும் அவர் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் பிரச்சினையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பை ஏற்படுத்திய ரிஹானா, தற்போது விநாயகர் பிரச்சினைகள் சிக்கி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.