close
Choose your channels

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

Wednesday, November 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளிவந்த ஒருநாள் கூத்து' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா நடித்த இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார். இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் அடுத்த படத்தை இயக்க தற்போது தயாராகிவிட்டார். 

நெல்சன் இயக்கும் அடுத்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் பொட்டன்ஷியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபு கூறியபோது, 'நான் தயாரிக்கும் அடுத்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உண்மைதான். இருப்பினும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மிக விரைவில் இந்த படம் குறித்த அனைத்து தகவல்களும் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

எஸ்.ஆர்.பிரபுவின் பொட்டன்ஷியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏற்கனவே நயன்தாரா நடித்த 'மாயா' மற்றும் சந்திப் கிஷான் நடித்த 'மாநகரம்' போன்ற வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.