close
Choose your channels

பிரார்த்தனையைவிட உலகில் வேறு எந்த மருந்தும் இல்லை: எஸ்பிபி குறித்து ஆக்சன் கிங் 

Wednesday, August 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அனைத்து திரை உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் சமூக வளைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’எஸ்பிபி அவர்கள் ஒரு மிகப் பெரிய மேதை. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்பட இந்திய மொழிகள் அனைத்திலும் அவர் பாடியவர். அவர் தற்போது உடல் நலம் இல்லாமல் இருந்தாலும் கடந்த சில நாட்களாக உடல்நிலை தேறி வருவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியாக இருக்கிறது.

எஸ்பிபி அவர்கள் உலகின் மிகப் பெரிய மேதை. இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை. பிரார்த்தனையைவிட வேறு எந்த மருந்தும் இல்லை என்று கூறுவார்கள். அவருக்காக கோடிக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கூடிய விரைவில் எஸ்பிபி சார் ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார். எஸ்பிபி சார் அவர்களே நாங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றோம். நீங்கள் ஒரு மிகப்பெரிய போராளி என்று எங்களுக்கு தெரியும். எனவே கண்டிப்பாக கொரோனாவில் இருந்தும் நீங்கள் மீண்டு வருவீர்கள். உங்களுடைய புதிய பாடலை கேட்க ஆவலுடன் இருக்கிறேன். சீக்கிரம் மீண்டு வாருங்கள்’ என்று ஆக்சன் கிங் அர்ஜுன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.