close
Choose your channels

ஐசரி கணேஷ் வீட்டில் நிகழ்ந்த துயரம்: திரையுலகினர் இரங்கல்

Thursday, July 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டில் நிகழ்ந்த துயரத்தை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயாரும் பிரபல நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் மனைவியுமான புஷ்பா ஐசரி வேலன் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இறுதிச் சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் பல்கலை வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த புஷ்பா ஐசரி வேலனின் கணவரும் நடிகருமான ஐசரி வேலன் எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி எம்ஜிஆர், அதிமுக என்ற கட்சியை தொடங்கியபோது அந்த கட்சியில் இணைந்து ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த புஷ்பா ஐசரிவேலன் மகன், ஐசரிகணேஷ் கல்வியாளர் மற்றும் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.