close
Choose your channels

என்.ஜி.கே ரிலீஸ் குறித்து தயாரிப்பாளரின் புதிய தகவல்

Wednesday, October 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. தீபாவளி கழித்து இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கலை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

'என்.ஜி.கே. படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சூர்யாவுக்காக காத்திருக்கின்றது. வரும் நவம்பரில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும். இந்த படத்தை ஒரு சிறந்த படைப்பாக உங்கள் முன் வைக்க அதிக ஆவலுடன் உள்ளோம்' என்று கூறியுள்ளார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் இந்த டுவீட்டால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.