close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தில் பணிபுரியும் 'புலி' டெக்னீஷியன்

Wednesday, October 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சிவாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 2 முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் போட்டோஷூட் நடந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் அறிமுகப்பாடலுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ள இந்த படத்தை பாண்டியராஜ் அவர்களின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். 'மகதீரா', 'புலி' போன்ற படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணி செய்த கமலக்கண்ணன் இந்த படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை செய்ய ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருந்தாலும் பாடல் காட்சிகளில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பி.சி.ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.