close
Choose your channels

போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்ற மறுநாளே சுட்டுக்கொலை: பிரபல பாடகருக்கு நேர்ந்த கதி!

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகர் ஒருவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்ற மறுநாள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆம்ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இந்தநிலையில் புதிய ஆட்சி ஏற்பட்ட உடன் பஞ்சாபியில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட 424 பேர்களுக்கு பாதுகாப்பு வாபஸ் வாங்கப்பட்டது. அதில் ஒருவர் பாடகர் சித்து மூஸ்வாலா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட மறுநாள் சித்து மூஸ்வாலா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொலை மிரட்டல் அவருக்கு இருந்ததால் தான் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்ற பஞ்சாப் அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.