close
Choose your channels

பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நடிகை ராதிகா வாழ்த்து

Monday, April 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 21ஆம்தேதி வரை பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெறவுள்ளன. இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் தீபா கர்மாக்கர் தேர்வு பெற்றுள்ளார்.

ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதல் பெண் வீராங்கனை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீபாவுக்கு இந்தியாவின் பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் 'தெறி' விஜய்யின் அம்மாவாக நடித்த நடிகை ராதிகாவும் தனது சமூக வலைத்தளத்தில் தீபாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து முதன்முதலாக ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தீபா தேர்வாகியுள்ள செய்தி கேட்டு பெருமை அடைகிறேன்' என்று ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.