close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ யார்? புதிய தகவல்

Saturday, January 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீட்சா, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது 'இறைவி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில் ரஜினி, விஜய் ஆகியோர்களின் அடுத்த படங்களை இயக்கும் பட்டியலில் இருந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படம் எது? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாரிக்க முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே நாகா, பைரவா ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.