close
Choose your channels

வரியை ரத்து செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் ரஜினிகாந்த் மனு!

Wednesday, October 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்துக்கு சென்னை மாநகராட்சி ரூபாய் 6.50 லட்சம் சொத்து வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் மத்திய மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்தது. இதனை அடுத்து சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த 6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.