close
Choose your channels

அரசியல் கேள்வி கேட்ட நிருபர்களுக்கு அறிவுரை கூறிய ரஜினி!

Sunday, March 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், தனது ரசிகர்கள் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார்.

இந்த நிலையில் நேற்று ஒரு பரமஹம்ச யோகானந்தர் குறித்த 'ஒரு யோகியின் சுயசரிதம்' என்ற ஒலி வடிவ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் ரஜினியிடம் நிருபர்கள் அரசியல், தேர்தல் குறித்த கேள்விகளை கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத ரஜினி, 'பரமஹம்ச யோகானந்தரின் ஆடியோ புத்தகத்தை கேட்டு, அனைவரும் பயனடைய வேண்டும் என்றும், மக்கள் இந்த புத்தகத்தை படித்துவிட்டு அமைதியை நோக்கி செல்ல வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

முன்னதாக, 'மக்களின் வாழ்க்கையில் கோபம் குறைய வேண்டும். கோபம் குறைந்தால் வாழ்க்கையில் துன்பத்தின் தாக்கம் இருக்காது. மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அனைவரும் அப்போதுதான் ஒற்றுமையாக இருக்க முடியும். இந்த புத்தகம் மக்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றும் வல்லமை கொண்டது என்று ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பேசினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.