close
Choose your channels

2.0' படத்தில் இருந்து வெளியேறுகிறார் எமிஜாக்சன்

Wednesday, December 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பமானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இன்றுடன் தனது முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு எமிஜாக்சன் வெளியேறவுள்ளதாகவும், விரைவில் அவர் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ரூ.350 கோடியில் பிரமாண்டமாக தமிழ், இந்தி, தெலுங்கு என தயாராகி வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்சயகுமார் வில்லனாக நடிக்கவுள்ளார். லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் இந்தியாவின் மிக அதிக பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.