close
Choose your channels

தமிழ்நாடு சுடுகாடாகும்: பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் ஆவேசம்

Wednesday, May 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அதன்பின்னர் பேட்டியளித்தார். அப்போது 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் போராட்டம் கலவரமாக மாறியது என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்தை திரித்து 'போராட்டம் செய்தவர்கள் எல்லோரும் சமூக விரோதிகளா? என ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியதோடு, மக்கள் போராட்டத்தை அவமதித்த ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினர்

இந்த நிலையில் சற்றுமுன்னர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறினீர்களே, அது எப்படி உங்களுக்கு தெரியும் என ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'எனக்கு எப்படி தெரியும் என்று கேட்க வேண்டாம், எனக்கு தெரியும் அவ்வளவுதான்' என்று கோபமாக கூறினார்.

மேலும் காவல்துறைக்கு நான் எப்போதும் சப்போர்ட் செய்வேன் என்றும் காவல்துறையினர்களை சமூக விரோதிகள் தாக்கியது தான் இந்த கலவரத்திற்கு காரணம் என்றும் கூறினார்

மேலும் எதற்கெடுத்தாலும் மக்கள் போராட்டம் போராட்டம் என்று சென்றால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்று ஆவேசமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.