close
Choose your channels

ரஜினியின் அரசியல் முடிவில் திடீர் மாற்றமா? சாமியாரை சந்தித்ததால் திடீர் திருப்பம்?

Wednesday, January 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும் அரசியலுக்கு வரவில்லை என்றும் சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார்

ரஜினியின் இந்த முடிவை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் வரும் பத்தாம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ரிஷிகேஷை சேர்ந்த நமோ சாமி என்பவர் ரஜினியை சந்தித்ததாகவும், அப்போது அவர் நீங்கள் அரசியலில் இருந்து பின்வாங்குவது சரியாக இருக்காது என்றும் அரசியல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ரஜினி அரசியலுக்கு வந்தால் ஏற்பட்டால் ஏற்படும் பலன்களை பட்டியலிட்டதாகவும் கூறப்படுகிறது

இதன் பின்னர் ரஜினி தனக்கு நெருக்கமானவர்களிடம் மீண்டும் ஆலோசனை செய்ய ஆரம்பித்து இருப்பதாகவும், நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னதை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தமிழ் மக்களுக்கு என்னால் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்தே தீர வேண்டும் என்றும் அதை ஏதாவது ஒரு வழியில் செய்துவிடுவேன் என்றும் உறுதியாக சொல்லி வருகிறாராம். மேலும் ரசிகர்கள் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள தகவலும் ரஜினியை எட்டியுள்ள நிலையில் விரைவில் ரஜினியிடமிருந்து அதிரடி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.