close
Choose your channels

கேப்டன் யார் என்பதை காலம் முடிவு செய்யும்: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் பெண் பிரமுகர்

Saturday, September 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் நவம்பர் மாதம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த உடன் அவர் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்

இந்த நிலையில் தற்போது அவர் அரசியலுக்கு வரவிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் தலைவர்கள் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில் பாஜக பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிக்கையில் ’அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வரவேண்டும் என்றும் அதன்பின் கேப்டன் யார் என்பதை காலம்தான் முடிவு செய்யும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசன் அவர்களின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தான் விரும்புவதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியிருந்தார் என்பதும், ரஜினி விருப்பப்பட்டால் அவர் அரசியல் கட்சி தொடங்கியவுடன் பாஜக உடன் கூட்டணி வைக்கலாம் என்று நயினார் நாகேந்திரன் அவர்களும் கூறியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.