close
Choose your channels

இந்த வாரம் மட்டுமல்ல, அடுத்த வாரமும் ஆரி, கேபியை நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்!

Monday, December 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த கோழி-நரி டாஸ்க் போட்டியாளர்களுக்கு இடையே பெரும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது என்பதும் இதனை அடுத்து கமல்ஹாசன் முன்னிலையில் கோழி யார்? நரி யார்? என்று தேர்வு செய்யப்பட்டது குறித்து அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இந்த வாரமும் போட்டியாளர்களுக்கு சர்ச்சைக்குரிய டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுக்கிறார். ’மாட்னியா’ என்ற இந்த டாஸ்க்கில் ஒரு ஹவுஸ்மேட், இன்னொரு ஹவுஸ்மேட்டை அழைத்து அவரது கையை குறிவைத்து அடிக்க வேண்டும். அவ்வாறு அடித்து விட்ட ஹவுஸ்மேட் ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அந்த சீட்டில் என்ன வார்த்தை உள்ளதோ அதற்கு ஏற்ப அந்த ஹவுஸ்மேட் ஒரு கேள்வி கேட்கலாம் என்பதும், அவர் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என்பதும் விதிகளாகும்

இந்த டாஸ்க்கில் ரம்யாவின் கையை அடித்துவிட்ட ஆரி அவரிடம் கேள்வி கேட்டபோது ’அடுத்த வாரம் நீங்கள் நாமினேட் செய்யும் இருவர் யார் யார்? எனக் கேட்க அதற்கு ரம்யா, ஆரி, கேபி என பதிலளிக்கின்றார். இந்த வாரமும் ரம்யா இதே இருவரைத்தான் நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆரியிடம் பாலாஜி கேள்வி கேட்டபோது ’நீங்கள் பைனலுக்கு வந்துவிட்டீர்கள், உங்களுடன் இருக்கும் 3 போட்டியாளர்கள் யாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்’ என்று கேட்க உடனே ரியோ எழுந்து ’ஐயா உண்மையான நரி இவருதாங்க’ என்று பாலாஜியை பார்த்து பிக்பாஸிடம் புகார் கூறுவது போல் சொல்வதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவு கூறுகிறது

மொத்தத்தில் இந்த டாஸ்க்கின் மூலம் போட்டியாளர்கள் ரகசியமாக உள்ளே மறைத்து வைத்ததை வெளியே கொண்டுவரும் டாஸ்க் ஆக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.