close
Choose your channels

கென்னடி கிளப்: கிளைமாக்ஸ் காட்சிக்காக நிஜ கபடி போட்டி நடத்திய படக்குழு

Tuesday, March 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடித்து வரும் 'கென்னடி கிளப்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ரூ.2 கோடி செலவில் நிஜ கபடி போட்டி தொடர் ஒன்றை படக்குழு நடத்திய தகவல் தற்போது வெளிவந்தூள்ளது

சுசீந்திரன், சசிகுமார் முதல்முறையாக இணைந்துள்ள 'கென்னடி கிளப்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விழுப்புரத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 பெண் கபடிக்குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து வந்துள்ள நிஜ வீராங்கனைகளை கொண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது இந்த படப்பிடிப்பில் ஏறத்தாழ 300 வீராங்கனைகள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர். இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப்படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.