close
Choose your channels

விஷாலின் 'இரும்புத்திரை 2' படத்தில் 2 முன்னணி நாயகிகள்!

Thursday, August 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் 60 கோடி ரூபாய் வசூல் செய்து நல்ல லாபத்தை அனைவருக்கும் கொடுத்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இந்த இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாகவும் விஷால் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் 'இரும்புத்திரை 2' படத்தில் விஷாலுடன் ரெஜினா மற்றும் ஷராரதா ஸ்ரீநாத் ஆகிய இரண்டு முன்னணி நாயகிகள் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இந்த வாரம் தொடங்வுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மற்றும் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் தகவல்களும் இந்த வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

விஷால் தற்போது சுந்தர் சி இயக்கி வந்த 'ஆக்சன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கிய 'ஹீரோ' திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.