close
Choose your channels

6 மாதத்திற்கு பின் குழந்தையின் பெயரை அறிவித்த நடிகர் ரியோராஜ்!

Tuesday, September 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கனா காணும் காலங்கள்’ உள்பட ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகர் ரியோராஜ், அதன்பின் சிவகார்த்திகேயன் தயாரித்த ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் விரைவில் போஸ்ட் புரோடக்ஷன் பணி தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரியோ ராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் தனது குழந்தைக்கு சரியாக ஆறு மாதம் முடிவடைந்ததை அடுத்து தனது குழந்தையின் பெயரை அவர் அறிவித்துள்ளார்

ரியோராஜ் குழந்தையின் பெயர் ‘ரிதி’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் குழந்தைக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.