close
Choose your channels

கடைசி நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் இரு விருந்தினர்கள்!

Monday, September 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது. ஏற்கனவே முகின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதி உள்ள ஐவரில் யார் யார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது அனேகமாக இந்த வாரம் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு இரண்டு புதிய சிறப்பு விருந்தினர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னரான ரித்விகாவும், கோல்டன் டிக்கெட் பெற்ற ஜனனியும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதாகவும் இவர்களுடைய காட்சி நாளைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து பெண் போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இரண்டு பெண் போட்டியாளர்கள் மட்டுமே இருந்தாலும் இருவருமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்களா? என்ற கேள்வி குறியே உள்ளது.

இந்த நிலையில் பெண் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இரண்டாம் சீசனின் இரண்டு பெண் போட்டியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஷ பாட்டில் என்ற பட்டப் பெயரை கொண்ட ஜனனி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஏதேனும் குழப்பத்தையும் விளைவிப்பாரா அல்லது போட்டியாளர்களுக்கு ஊக்கம் கொடுப்பாரா? என்பதை நாளை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.