close
Choose your channels

நான் அப்படி பேசியிருக்க கூடாது: ரஜினி குறித்து ஆர்ஜே பாலாஜி!

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி தீபாவளி விருந்தாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை கடந்த சில நாட்களாக ஆர்ஜே பாலாஜி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மூக்குத்தி அம்மன்’ புரோமோஷனின் ஒரு பகுதியாக இன்று டுவிட்டரில் அவர் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரஜினிகாந்த் குறித்த கேள்வி ஒன்றுக்கு ஆர்ஜே பாலாஜி பதிலளித்த போது ’நான் சூப்பர் ஸ்டாரின் ரொம்ப ரொம்ப பெரிய ரசிகன். சின்ன வயதில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் தாத்தா ’ரஜினி ஒரு நல்ல மனிதர்’ என்று கூறினார். அது என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்து உள்ளது. ரஜினிகாந்த் ஒரு அற்புதமான மனித நேயம் உள்ளவர். ஒரு சூப்பர்மேன்.

‘தளபதி’ முதல் ’தர்பார்’ வரை அவரை பத்தி நிறைய நினைவுகள் எனக்கு உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் அவர் அரசியலுக்கு வருவது குறித்து பேட்டி ஒன்று கொடுத்தேன். அந்த பேட்டியை நான் பின்னர் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. நான் அப்படி பேசியிருக்க கூடாது என்று தோன்றும். அதற்காக நான் மிகுந்த வருத்தப்பட்டேன். நான் அவருக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். அவருக்கு அனைத்து சந்தோசங்களும் அவர் நினைக்கும் எல்லா காரியமும் கைகூட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.