close
Choose your channels

ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து ஆர்.கே.செல்வமணி கருத்து

Monday, July 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீதும், தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் பட்டியல் நீண்டுகொண்டே போவதை கட்டுப்படுத்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகினர் இடையே கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபலங்கள் இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குனரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறியபோது, 'ஸ்ரீரெட்டி விவாகரத்தில், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சினிமா துறையையே களங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று கூறியுள்ளார்.

மேலும் க்யூப் நிறுவனத்திற்கு மாற்றாக தொடங்கப்பட்டுள்ள மைக்ரோ பிளக்ஸ் மூலம் திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்பு பிரச்சினை முடிவுக்கு வரும்' என்றும் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.