close
Choose your channels

மலேசியா முருகன் கோவிலில் ரகசிய திருமணம்.. 'ரோஜா' சீரியல் நடிகையின் கணவர் யார் தெரியுமா?

Friday, March 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ என்ற சீரியலில் நடித்த நடிகை மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ என்ற சீரியலில் நாயகி ஆக நடித்தவர் நடிகை பிரியங்கா. இவர் தமிழில் ’காஞ்சனா 3’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் பல சீரியல்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘ரோஜா’ சீரியல் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் ’சீதாராமன்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும் இவரது திருமணத்திற்கு பல சிக்கல்கள் இருந்த நிலையில் தற்போது திடீரென மலேசியா முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவருடைய திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரு கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.