close
Choose your channels

முதல் நாளிலேயே ரூ.200 கோடி வசூல் செய்யுமா 'ஆர்.ஆர்.ஆர்'?

Thursday, March 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நாளைய முதல் நாளில் இந்த படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எஸ்எஸ் ராஜமவுலியின் ’பாகுபலி’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 135 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது 5 ஆண்டுகள் கழித்து இந்த படம் இந்தியாவில் மட்டும் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அடுத்து இந்தியாவில் மட்டும் முதல் நாளில் இந்த படம் ரூ.100 முதல் 120 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் மட்டும் இந்த படம் முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்றும் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில் சுமார் 40 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதை அடுத்து முதல் நாளில் 60 முதல் 80 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் எனவே இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடி முதல் நாளிலேயே வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திரையுலக வட்டாரத்தில் பெரும் ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.