close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் சாய்பல்லவி?

Saturday, June 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவுடன் சாய்பல்லவி நடித்த 'என்.ஜி.'கே' திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் சாய்பல்லவி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண்தேஜா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் இந்த படத்தில் இருந்துவிலகிவிட்டதால் அவருக்கு பதில் இயக்குனர் ஒருசில நடிகைகளை பரிசீலனை செய்து வருவதாக கூறப்பட்டது.

இந்த கேரக்டரில் நடிக்க வைக்க பாலிவுட் நடிகைகளான ஷராதா கபூர் மற்றும் ப்ரிணிதி சோப்ரா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சாய்பல்லவியிடமும் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் கனவாக இருக்கும் நிலையில் அந்த வாய்ப்பு சாய்பல்லவிக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.