close
Choose your channels

சமந்தாவின் பான் - இந்தியா திரைப்படத்தின் முக்கிய தகவல்!

Sunday, December 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவரான சமந்தா சமீபத்தில் பான் - இந்தியா திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் ’யசோதா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் ’யசோதா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுக்கு வந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வரும் ’யசோதா’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்திற்கு மணிசர்மா இசை அமைத்து வருகிறார் என்பதும் சுகுமார் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் அகில இந்திய அளவில் சமந்தாவுக்கு புகழை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.