close
Choose your channels

'முனிகள் வசிக்கும் தவ வனமாயின் காமன் அம்பு புகுமே'.. 'ஷாகுந்தலம்' சிங்கிள் பாடல்!

Thursday, January 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா நடித்த 'யசோதா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ‘ஷாகுந்தலம்’ வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ’மல்லிகா மல்லிகா’ என்று தொடங்கும் இந்த பாடலை ரம்யா பெஹாரா என்பவர் பாடியுள்ளார். மணி சர்மா கம்போஸ் செய்த இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

காதல் ரசம் சொட்ட சொட்ட மெலடி பாடலாக அமைந்துள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, கெளதமி, அதிதிபாலன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ‘மல்லிகா மல்லிகா’ பாடலின் சில வரிகள் இதோ:

மல்லிகா மல்லிகா மாலதி மாலை தா
சூடவா சூடவா எங்கே என் ராஜனே

மல்லிகா மல்லிகா மாலதி மாலை தா
சூடவா சூடவா எங்கே என் ராஜனே

ஹம்சிகா ஹம்சிகா காலமே நீளுதே
போய்வா போய்வா ராஜனை தேடி வா

அவனுக்கோர் காணிக்கை நான் தர வேண்டுமே
காதலே நானடா யாதுமாய் ஆனேன்

ஆஹா நீலவேணி பூமி பூக்கும் காலமே
ராஜன் உனைச்சேர ராஜியமாலும் ராணி நீ

முனிகள் வசிக்கும் தவ வனமாயின்
காமன் அம்பு புகுமே

காதல் பூவின் வாசம் காற்று தடுத்தால் தகுமோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.