close
Choose your channels

தில் ராஜூவுடன் படம் பார்த்த சமந்தா.. படம் முடிந்தவுடன் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி..!

Tuesday, March 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா தான் நடித்த திரைப்படத்தை இயக்குனர் குணசேகரன் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுடன் படம் பார்த்துவிட்டு படம் முடிந்தவுடன் இருவரையும் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடிகை சமந்தா, தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் குணசேகரன் ஆகிய இருவருடன் ‘சாகுந்தலம்’ படம் பார்த்தார். இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள சமந்தா, ‘ கடைசியாக இன்று நான் ’சாகுந்தலம்’ திரைப்படத்தை பார்த்தேன். இயக்குனர் குணசேகரன் அவர்கள் இடம் என் இதயமே சென்று விட்டது. என்ன ஒரு அழகான திரைப்படம். நம் மிகப்பெரிய காவியங்களில் ஒன்றை அவர் கண்முன் உயிர்ப்பித்துள்ளார். குடும்ப பார்வையாளர்கள் இந்த படத்திற்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

குழந்தைகளாக நீங்கள் அனைவரும் இந்த மாயாஜால உலகத்தை விரும்பி பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். தில் ராஜு மற்றும் நீலிமா குணசேகர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க எனக்கு அற்புதமான வாய்ப்பளித்ததற்கு நன்றி, ‘சாகுந்தலம்’ என்றென்றும் என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.