close
Choose your channels

2ஆம் பாகமாகும் சசிகுமார்-சமுத்திரக்கனியின் வெற்றிப்படம்

Tuesday, January 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலக நண்பர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கி வரும் சமுத்திரக்கனி-சசிகுமார் இணைந்து பணியாற்றிய 'சுப்பிரமணியபுரம், 'நாடோடிகள்', போராளி, 'ஈசன்', போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் மீண்டும் இந்த நண்பர்கள் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

இந்த படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமார் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சசிகுமார் தற்போது முத்தையாபாண்டியன் இயக்கும் 'அசுரவதம்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் குட்டிப்புலி' இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.