close
Choose your channels

நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் தான் காதுகுத்து நடக்கும்: சந்தானம் கலகல பேட்டி..!

Sunday, July 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தனக்கும் நயன்தாராவுக்கும் உள்ளது அண்ணன் தங்கை உறவு என்று கூறியுள்ளார். மேலும் நயன்தாராவின் குழந்தைகளுக்கு எனது மடியில் வைத்து தான் காதுகுத்து நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சந்தானம் நடித்த ’டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சந்தானம், பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் நயன்தாராவுடன் உள்ள உறவு குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில் ‘வல்லவன்’ என்ற திரைப்படத்தில் நடித்த காலத்திலிருந்து நயன்தாராவை தனக்கு நன்றாக தெரியும் என்று எனக்கும் அவருக்கும் உள்ளது அண்ணன் தங்கை உறவு என்றும் சினிமா துறையில் எனக்கு கிடைத்த ஒரு தங்கை என்றும் கூறினார்.

மேலும் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படத்தில் தனக்கு ஒரு முக்கிய கேரக்டர் இருந்ததாகவும் அந்த கேரக்டர் குறித்து பேசுவதற்கு அவருடைய வீட்டுக்கு சென்றபோது தடபுடலாக விருந்து வைத்தனர் என்றும் கூறினார்.

அவருடைய இரண்டு குழந்தைகளை தான் வாழ்த்தியதாகவும் தனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் அப்போதுதான் தாய்மாமன் சீர் செய்வேன் என்று காமெடியாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.