close
Choose your channels

புதுமுக நடிகரை விஜய்சேதுபதியுடன் ஒப்பிட்ட சரண்யா பொன்வண்ணன்!

Wednesday, October 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்தவர் சரண்யா பொன்வண்ணன் என்பது தெரிந்ததே. அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் அறிமுக நடிகர் நடித்து வரும் ராஜா நடித்து வரும் ’அருவா சண்டை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் ராஜாவின் நடிப்பு குறித்து சரண்யா கூறியதாவது:

கடந்த சில வருடங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இந்த படம் மட்டும்தான். விஜய்சேதுபதியுடன் 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் நடிக்கும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இந்தப் படத்தில் நடிக்கும்போது கிடைத்தது. ராஜா இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார்.

இந்த படம் ஒரு சிறந்த கதைக்களம். இந்த படத்திற்கு டப்பிங் பேசும்போது நான் என்னை அறியாமலே கண் கலங்கி விட்டேன். இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தைரியமாக தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்துள்ள ராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.