close
Choose your channels

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: பிரபல நடிகரின் கட்சி அறிவிப்பு

Wednesday, March 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கிட்டத்தட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு கூட்டணியிலும் இணையாத கட்சிகள் மூன்றாவது கூட்டணி அல்லது தனித்து நிற்க வேண்டிய நிலையில் உள்ளன.

இந்த நிலையில் 40 தொகுதிகளிலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் அறிவித்துள்ளார். சமீபத்தில் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்ததால் இருவரும் இணைந்து கூட்டணி வைக்க வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. ஆனால் விஜய்காந்த் அதிமுக, திமுக என மாறி மாறி பேசிவருவதால் சரத்குமார் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளார்.

அதேபோல் டிடிவி தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடவுள்ளதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆறுமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.