close
Choose your channels

மீண்டும் ஒரு டபுள் ஆக்சன் படத்தில் சரத்குமார்

Thursday, August 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நாட்டாமை', 'சூர்யவம்சம்', 'சண்டமாருதம் ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்த சரத்குமார் மீண்டும் ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ஜி.வி.பிரகாஷின் 8வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்-வைஷ்ணவி நடிக்கவுள்ள இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், சரத்குமாரின் காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாக அமையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக சரத்குமார் வாள்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.