close
Choose your channels

மதுரையில் தன்னார்வலராக மாறிய பிரபல ஹீரோ: பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு

Sunday, April 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிந்தே. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களை போலீசார் கண்டித்தும் தண்டித்தும் வருகின்றனர்

இந்த நிலையில் மதுரையில் ஊரடங்கு உத்தரவின் போது வெளியே வராமல் இருப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர்களுடன் இணைந்து பிரபல நடிகர் சசிகுமார் தன்னார்வலராக மாறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்

மதுரையில் ஒரு நாள் தன்னார்வலராக மாறி பணியாற்றிய நடிகர் சசிகுமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து சசிகுமார் கூறுகையில், ‘நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் சசிகுமார் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.